கோரொனாவில் இருந்து மக்களை காப்பாற்ற கேரளா அரசின் தாராளமான அறிவிப்பு
கோரொனாவில் இருந்து மக்களை காப்பாற்ற கேரளா அரசின் தாராளமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ் அறிவித்தலை கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.
அதன் சாராம்சம் இதோ:
-
நிவாரணத்துக்கு 20,000 கோடி ஒதுக்கீடு
-
அனைவருக்கும் இலவச அரிசி
-
தேவையிருக்கும் குடும்பங்களுக்கு கடனுதவி 2000 கோடி.
-
பென்சன் வாங்குவோருக்கு இரண்டு மாத பென்சன் தொகை இம்மாதமே வழங்கப்படும்.
-
பென்சன் இல்லா குடும்பங்களுக்கு தலா ரூ.1000
-
20 ரூபாய்க்கு உணவளிக்கும் ஆயிரம் அரசு உணவகங்கள்
-
மருத்துவ உதவிக்கு மட்டும் 500 கோடி ஒதுக்கீடு